டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சரவணனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - பெற்றோர்கள் கோரிக்கை


கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சரவணனின் பெற்றோர் அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மருத்துவ மேல்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார், அங்கு கடந்த ஜூலை 10 ஆம் தேதி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு சென்ற அவரது பெற்றோர்கள் சரவணன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்நிலையில் சரவணன் பிரேத பரிசோதனையின் முடிவில் திட்டமிட்டு சரவணனுக்கு கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். 

சரவணன் மரணம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் உயிரிழப்பிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சரவணன் கொலையில் டெல்லி காவல்துறையினருக்கு சம்மந்தம் உள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் விரைவில் புதிய தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...