மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கே.கே.புதூர் அரசு பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாநகராட்சியில் பணிபுரியும் 2,740 நிரந்த துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த ஆணையாளர் தலைமையில் சிஐஐ, ஐடிசி மற்றும் துப்புரவு பணியாளர்களின் சங்கங்கள் ஆகியோருடன் நவம்பர் மாதம் ஆலோசனை நடத்தி துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மண்டல வாரியாக சனிக்கிழமைகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த 2 வாரமாக ஒவ்வொரு வார்டிலும் நேரில் சென்று துப்புரவு பணியாளர்கள் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அதன் அறிக்கை இன்று வழங்கப்பட்டது.

மேலும், இந்த மருத்துவ முகாமில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கே.ஜி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, இராமகிருஷ்ணா மருத்துவமனை, குப்புசாமிநாயுடு மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, கங்கா மருத்துவமனை, சங்கரா மருத்துவமனை மற்றும் தைரோகேர் ஆகிய முன்னனி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரின் துய்மையை பாதுக்காக்கும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிக்காக்க சிறப்பு மருத்துவங்களான தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, நுரையீரல் பாதுகாப்பு சிகிச்சை, இதயம் சார்ந்த சிகிச்சைகள், பொது மருத்துவம் மற்றும் பெண் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  



மேலும், இதில் ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் தனித் தனியாக சிகிச்சையளிக்கப்பட்ட விவரம் சார்ந்த கோப்புகள் வழங்கப்பட்டது. நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் இந்த கோப்பை கொண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாமில் பரிசோதனை மேற்கொண்டு பணியாளர்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் ஆணையாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார். 



மேலும், மாநகராட்சியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிகாக்கவும் இந்த மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீதமுள்ள கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வரும் சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்தார்.                                                        
 
இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் (பொ)மோகனசுந்தரி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மத்திய மற்றும் மேற்கு மண்டல சுகாதார அலுவலர்கள், ரமணி, சங்கரா மருத்துவமனை, பிரவீன் ஜெம் மருத்துவமனை, சிஐஐ குழும உறுப்பினர்கள், ஐடிசி தன்னார்வ நிறுவன ஊழியர்கள் மற்றும் துப்புரவு சங்க உறுப்பினாகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...