வீட்டிற்குள் கார் நுழைந்து 5 பேர் காயம்- காரை ஓட்டியவர் தலைமறைவு

கோவை வடவள்ளியில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள அஜ்ஜனூரில் சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வடவள்ளியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அஜ்ஜனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.



இந்த விபத்தில் அங்கிருந்த காளிமுத்துவின் தாய் லட்சுமி (60), மருமகள் சரஸ்வதி (35), பேத்திகள் சங்கீதா (12), உதயசங்கரி (9) மற்றும் ரங்கநாதன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர்  சித்ரா மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை பரிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சுண்டபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...