அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் சசிகலா படத்தின் மீது சாணி வீசியதால் பரபரப்பு


அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியினர் வரவேற்பு தந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா என்பவர் மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.



இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அதனை அப்புறப்படுத்தி போஸ்டரை கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை கொன்ற சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...