வெள்ளிங்கிரி அடிவாரத்தில் ஈஷாவின் சிலை பதிக்கும் பணியால் வழித்தடம் மறந்த காட்டு யானை? ஊருக்குள் நுழைந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்



கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரப் பகுதியில் ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள நீரோடை அருகே நேற்றிரவு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதே பகுதியில் தொடந்து நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு உடல்நலன் பாதிப்பு ஏதேனும் இருக்குமா எனவும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 

உடல் சோர்வுடன் நிற்கும் அந்த யானை மக்கள் வாழும் பகுதிக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று மாலை அல்லது இரவுக்கு பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஈஷா யோகா மையம் அப்பகுதியில் உள்ள நிலங்களில் சிலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் யானை வழிதெரியாமல் அதே பகுதியில் தொடர்ந்து நின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கோவை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் நீண்ட நேரமாக யானை ஒரே பகுதியில் நின்றிருப்பது முட்டத்துவயல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை யானை நடக்க துவங்கினால் அது மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...