ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு மரங்கள்


மதுக்கரை அருகே உள்ள மைல்கல் பகுதியில் அரசு பொது இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய புங்கமரங்களை அகற்றுவது குறித்து ஓசை அமைப்பின் சையது-விற்கு மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஓசை மற்றும் பசுமை தேசம் தன்னார்வலர் அமைப்பின் சையது மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த மரங்களை வேருடன் அகற்றி கோவைபுதூரில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடவு செய்தனர்.



இதுகுறித்து ஓசை சையது நமது நிருபரிடம் கூறியதாவது:-

மாநகராட்சி பொது இடத்தில் இருந்த மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய மாநகராட்சி தன்னார்வ அமைப்பினரை தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதன் முறை. சமீபத்தில் பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்ட மரங்கள் பல்வேறு இடங்களில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களை ஊக்குவித்துள்ளது" என்றார்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...