மூளைச் சாவு அடைந்த வாலிபர் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

கோவை, தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35), மனைவி மஞ்சு, இவருக்கு இரு பெண் குழந்தைகள், தாயார் நாகம்மாள், மற்றும் சகோதரர் சுப்ரமணியம், ஆகியோருடன் வசித்து வந்தார். விஜயகுமார் கடந்த 26ம் தேதி மதியம் 1.40 மணியளவில் துடியலூரில் உள்ள அவர் வேலை செய்யும் லேத் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது என்.ஜி.ஜி.ஒ காலனி கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக அவர் துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அன்று இரவு 8.30 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 27ம் தேதி மாலை 4.30 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும்  உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து விஜயகுமார் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதன் படி விஜயகுமார் உடல் உறுப்புகள் 28.12.16 அன்று தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...