தீராத பணப்பிரச்சனையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் தாள்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கோவையில் பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



உயர் மதிப்பு ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் பழைய ரூபாய் தாள்களை மாற்றவும், புதிய ரூபாய் தாள்களை பெறவும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே பணப்பிரச்சனைக்கு 50 நாட்களில் தீர்வு ஏற்படாவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு வெளியிட்டு 50 நாட்கள் கடந்த நிலையில் பணப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்கு கயிற்றுடன் திரண்ட அவ்வமைப்பினர், பிரதமர் மோடிக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றனர். 90 சதவிகித ஏடிஎம்-கள் மூடப்பட்டு இருப்பதாகவும், திறந்திருக்கும் ஏடிஎம்களிலும் பணம் கிடைப்பதில்லை எனவும், வங்கிகளிலும் போதியளவு பணம் கிடைக்காமல் நாடு முழுவதும் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், ஆனால் மக்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசு தினந்தினம் புதியபுதிய அறிவிப்புகள் மூலம் மக்களை குழப்பி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க காத்திருந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டு இருப்பதால் தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர்கள், 50 நாட்களுக்குள் பண நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை எனில் தூக்கில் தொங்குவேன் என அறிவித்திருந்த பிரதமர் மோடிக்கு நினைவூட்டும் வகையில் தூக்கு கயிற்றை அனுப்புவதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து, தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பிரதமருக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்ற சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...