உணவு பொருட்களை பழைய செய்தி தாள்களில் உபயோகிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்


அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கப்படும் வடை, பஜ்ஜி போன்டா உள்ளிட்ட உணவு பொருட்களை பழைய நாளிதழ்களில் வைத்து பரிமாறுவதோ, பொட்டலம் செய்து கொடுப்பது உடலுக்கு தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகள் உண்பதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். செய்தி தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கும் தரும் வேதிபொருட்களால் ஆனது. மேலும் பழைய செய்திதாள்களில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியதாகும். இது அஜிரணம், குடல் சம்மந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய் சம்மந்தமான பாதிப்புகளை வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் பெரியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

எனவே, அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இதற்கு பதிலாக வாழை இலை போன்ற தீங்கு தராத பொருட்களை கொண்டு உணவு பொருட்களை சுற்றி கொடுக்க வேண்டும் என்றும் பாலிதீன் பொருட்களில் டீ, காபி உணவு போன்ற சூடான பானங்களை பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனவும். மேலும், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கு கால அவகாசம் ஆகஸ்ட் 2016 க்கு பின் நீட்டிக்கப்படவில்லை. எனவே அனைத்து தரப்பினர்களும் உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...