கோவையிலுள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


உலக முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதிவரை கொண்டாடவுள்ளனர். சீக்கிய மதகுரு மக்கள் ஒன்றிணைந்து ஜனவரி 1ம் தேதி அன்று குருத்வார சிங் சபாவில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் மூலம் ஊர்வலமாக கொண்டு  அப்பகுதியை சுற்றி மீண்டும் குருத்வார சிங் சபாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனவரி 2ம் தேதி குருத்வார சிங் சபாவில் ராஹி ஜாத பாய், குருப்ரீத் சிங், பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனை பக்தி பாடல்கள் மாலை 7:30 மணி முதல் 9:30 நடைபெறவுள்ளது. ஜனவரி 4ம் தேதி சீக்கிய குரு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து குருத்வார சிங் சபாவில் ஜனவரி 3-5ம் தேதி வரை சீக்கிய குருமார்கள் குரு கரந்த் சாஹிப் புனித நூல் படித்தல், மற்றும் இறுதிநாளில் குருநானக் கீர்த்தனா மண்டல் சார்பில் கீர்த்தனைகள் இசைக்கப்படவுள்ளது. மேலும் ஜோஹிந்தர் சிங், திலோக் சிங், ராஹி ஜாதா மற்றும் பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் 1970ல் சீக்கிய மதத்திற்க்காக கோவில் கட்டப்பட்டது. இன்று குருத்வார சிங் சபா உறுப்பினர்களாக 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குருத்வார சிங் சபா 2017ம் ஆண்டுடன் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...