கோவையில் நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இசை நிகழ்ச்சி!

இந்தியன் ரெட் கிராஸ் சோசைட்டி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வெல்ஃபேர் அசோஷியேஷன் இனைந்து கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான தொகையீட்டும் வகையில் நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'தனா' ரத்த வங்கி மற்றும் 'ஆதரவு' என்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக 'தரங்கி' என்னும் இசை நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி இனைந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியை விஜய் டிவி பேச்சாளர் பாவனா தொகுத்து வழங்க உள்ளார்.



இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் சந்திரா ஹூண்டாய் ஷோரூம்கள், கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களிலும் இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ரூபாய் 250 முதல் 10,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7397044999 மற்றும் 7397770555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...