ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை கோரி ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு


ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்ஒரு பகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாட்டு வண்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதித்து தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறிய அவ்வமைப்பினர், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட போட்டிகளை தடையை மீறி நடத்துவோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பின் ஒரு பகுதியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...