இளம்பெண்ணை கொலை செய்து தலைமறைவான வடமாநில தொழிலாளி- காவல்துறை தீவிர விசாரணை


கோவை அருகே தனியார் நூற்பாலையில் தங்கியிருந்து இளம்பெண்ணை கொலை செய்து தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனியார் நூற்பாலை நடத்திவருகிறார். இவரது நூற்பாலைக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் அப்துல் ஜாபர் (21) கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து (20) என்பவருடன் வந்து வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் கனவன் மனைவி என கூறியுள்ளனர். 

இவர்கள் இருவரும் நூற்பாலையின் அறையில் தங்கியிருந்த நிலையில், திங்களன்று காலை இருவரும் பணிக்கு வராததால் பணியாளர் ஒருவர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். 

அப்போது, இந்து துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட பணியாளர் நூற்பாலையின் உரிமையாளர் செல்வராஜிடம் இந்து பிணமாகக் கிடப்பதை கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அங்கு வந்த சூலூர் காவல் துறையினர் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அப்துல் ஜாபர், இந்து தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக இந்துவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தலைமறைவான இந்துவுடன் இருந்த அப்துல் ஜாபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...