தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்ட பொது ஏலம் விடாததைக் கண்டித்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை


தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது இடையூராக உள்ள மரங்களை வெட்ட பொது ஏலம் விடாமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்ட தேசிய நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து கோவை மாவட்ட மர வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை- பொள்ளாச்சி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்ற சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டது.  அதேப்போல் கோவை  ஈச்சனாரி- பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை உள்ள சுமார் 1714 அரச மரம், ஆலமரம் , புளியமரம், வாகை மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்ட வேண்டியுள்ளதால் அவற்றின் மதிப்பை வனத்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் பொது ஏலத்தில் விடப்படும் என கோவை மாவட்ட மர வியாபாரிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த டெண்டர் ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த மரம் வெட்டும் பணியை பொது ஏலத்தில் விட்டால் ஒரு கோடி வரை ஏலம் போகும். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட்டதன் மூலம் அரசிற்கு 75 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் சாலை விரிவாக்க ஒப்பந்தத்தோடு மரம் வெட்டி விற்பனை செய்ய ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததாகவும் கோவை மாவட்ட மர வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

கோவை மாவட்டத்தில் மட்டும் மர வியாபாரத்தை நம்பியே 250-க்கும் மேற்பட்ட மர வியாபாரிகள் உள்ளதாகவும், பொது ஏலம் விடாமல் தனியாருக்கு கொடுத்து அரசு வருவாய் இழப்புடன், வியாபாரிகளையும் கடுமையாக பாதிப்படையச் செய்யும் இச்செயலைக் கண்டித்து கோவை திருச்சி சாலை கோத்தாரி லேஅவுட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மரவியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...