கோவை சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார். 



இந்த பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என பத்து தொகுதிகளில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 06 ஆயிரத்து 824 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 2 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 276 பேரும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து வீடு மாறியவர்கள், உயிரிழந்தவர்கள், பல முறை பதிவு செய்தவர்கள் என 91 ஆயிரத்து 54 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...