ஏடிஎம்மில் மோசடியில் ஈடுபட்டவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு மாறாக கணக்கு காட்டிய பெண் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்


பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் கடந்த அக்டோபர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்த வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாகக் கூறி அவரது ஏடிஎம் அட்டையை மோசடி செய்து பறித்துள்ளார்.

மேலும், அவருக்கு போலி அட்டையை கொடுத்தனுப்பிய அந்த வாலிபர் பேராசிரியரின் கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோவை காட்டூர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா மாலினி, செந்தில்குமாரை கைது செய்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளார். 

ஆனால், காவல்துறை பதிவேட்டில் குறைந்த மதிப்பிலான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில்குமாரின் உறவினர் அளித்த தகவலின் பேரில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா மாலினி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...