ஸ்ரீ இராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர். செல்வா டயீட்டஸ் கலந்து கொண்டார். முதன்மை இயக்கு அலுவலர் ஸ்ரீ.வி.ராமகிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். டி.நிர்மலா அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து, 10 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 98 இளங்கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை நர்சிங் மாணவி பி.சிந்துஜா மற்றும் போஸ்ட் பேசிக் நர்சிங் மாணவி லியா, இளங்கலை நர்சிங் மாணவி கிருத்திகா உள்ளிட்டோருக்கு விருது மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் டாக்டர். செல்வா டயீட்டஸ் பேசுகையில், செவிலியர்கள் தங்களுடைய அறிவுத்திறனை மேன்மைபடுத்திக்கொள்ள சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிந்து செயல்படவேண்டும். நாம் இலக்குகளை அமைத்து அவைகளை அடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.

நிரைவாக துணை பேராசிரியர் சித்ரா ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...