ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து கோவை மெடிக்கல் சென்டர் சாதனை


இயந்திர விசையைச் கொண்டு (ரோபோடிக்) அறுவை சிகிச்சை செய்முறையை தற்பொழுது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கொண்டுவந்துள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறையில் ஈடுபடுபவர்கள் ஓரிரு மருத்துவர்களே ஆகும்.

மருத்துவர்கள் ரோபோடிக் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன் அமர்ந்து ரோபோடிக் இயந்திரத்தின் கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் பல்வேறு நன்மைகள் உண்டு. ஒரு மிகச்சிறிய துளையின் வழியாக உடல் உறுப்புகளை அணுகி அதன் மூலம் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் உடலில் சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். அது தவிர நோயாளிக்கு ஏற்படும் இரத்தக்கசிவும் மிகக்குறைவு.

கேஎம்சிஎச் ரோபோடிக் கார்டியாக் சர்ஜரி இன்ஸ்டிடியூட் இயக்குநர், தலைமை ஆலோசகர் மற்றும் மார்பு பகுதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரஷாந்த் வைஜியநாத் 10 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பைபாஸ், சிக்கலான பெருந்தமணி குருதி நாள யெளிவு, வால்வு பழுது மற்றும் ரேடோ பைபாஸ் அறுவை சிக்சை போன்றவற்றை மேற்கொண்டுள்ளார்.

கொங்கு மண்டலத்திலேயே கேஎம்சிஎச் மருத்துவமனையில் இவர் தான் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சையிலும் பயிற்சி பெற்றவர் மருத்தவர் பிரஷாந்த் வைஜியநாத்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருதய ரோபோடிக் அறுவை சிகிச்சை நேற்று முதல்முறையாக நடைபெற்றது. இதுகுறித்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிச்சாமி கூறுகையில், "வழக்கமாக மேற்கொள்ளப்படும் 10 - 12 அங்குலம் அளவிற்கு மார்பை திறத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையை காட்டிலும், ரோபோடிக் அறுவை சிகிச்சை 1 - 2 செ.மீட்டர் அளவில் குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. 



குறைந்த அளவு வலி, மயக்க அளவு, இரத்த இழப்பு, விரைவாக குணமடைதல், சிறிய அளவிலேயே ஏற்படும் தழும்பு போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்காமல் ஒரு சில நாட்களிலேயே குணமடைந்து வீட்டுக்கு திரும்ப இயலும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...