சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்து பயிர்களுக்கு தகுந்தபடி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குடி நீர் பற்றாகுறை சூழலை பயன்படுத்தி  சிலர் போராட்ட சூழல்களை  ஏற்படுத்துவதாகவும், இதனை தவிர்த்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 140 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், சிறுவாணி அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  கோவை கொண்டு வருவது தொடர்பாக கேரள அதிகாரிகளுடம் தமிழக அதிகாரிகள்  கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வறட்சி தொடர்பாக அறிவிக்க மத்திய அரசு சில விதிமுறைகளை வைத்து இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி  மத்திய அரசிடம் தேவையாக நிதியை  தமிழக அரசு கேட்டுப்பெறும் எனவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொண்டு உதவ முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர்வடிகால் வாரியம், வேளாண்மை துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...