தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்துக்கு மூன்று தங்க பதக்கங்கள்


கோவையில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77 வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைகழகங்களை சேர்ந்த 2,605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் நாளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மும்முறை தாண்டுதல், 100 மற்றும் 800 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 



இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனைகள் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சேர்ந்த அன்பரசி என்னும் மாணவி மும்முறை தாண்டும் போட்டியில் தங்க பதக்கத்தையும், மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரியா என்னும் வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடிய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் சிறப்பாக விளையாடி  தங்க பதக்கத்தையும், அடுத்த இடத்தை பிடித்த மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த ரேவதி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...