தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்துக்கு மூன்று தங்க பதக்கங்கள்


கோவையில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77 வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைகழகங்களை சேர்ந்த 2,605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் நாளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மும்முறை தாண்டுதல், 100 மற்றும் 800 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 



இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனைகள் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சேர்ந்த அன்பரசி என்னும் மாணவி மும்முறை தாண்டும் போட்டியில் தங்க பதக்கத்தையும், மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரியா என்னும் வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடிய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் சிறப்பாக விளையாடி  தங்க பதக்கத்தையும், அடுத்த இடத்தை பிடித்த மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த ரேவதி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...