குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை: குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக குறு, சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SGST வணிகவரி துறை, 2007 முதல் 2022 வரை முடிக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கோரி, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு அபராதம் விதித்து வருவதாகவும், பழைய கணக்குகளை சமர்ப்பிக்க கடுமையான நெருக்கடி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்டு தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, நடப்பு கணக்குகளை மட்டும் சரிபார்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என ஜேம்ஸ் தெரிவித்தார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சவுந்தரகுமார், ரவீந்திரன், சுரேந்திரன், சுரேஷ், பாண்டியன், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...