ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இருதய ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை


திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமிக்கு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய நிபுணர் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமிக்கு ஈ சி ஜி எடுத்து பரிசோதனை செய்துபோது அவரது இடதுபுறத்தில் உள்ள ஈரிதழ் தடுப்பு வால்வில் (மிட்ரல் வால்வு)  கசிவு இருந்தது. அதோடு இருதயமும் பெரியதாகியிருந்தது. ஈரிதழ் வால்வு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜமூர்த்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.



டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள், விஜய் சதாசிவம் அசோக் ஹரிஹரன், மேனன், அருண்குமார், கிருஷ்ணன், சுஜித் ஆகியோர் அடங்கி குழுவினர் மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மார்பின் வலது பகுதியிலிருந்து 3 இன்ச் அளவிற்கு துளையிட்டு, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று தொழில்நுட்ப சிகிச்சைப்படி வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவரது வால்வு, சரி செய்ய இயலாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. அறுவை சிகிச்சையில் மாற்றி அமைத்த பின், இரண்டு மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் இயல்பாக நடக்கவும் செய்தார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலேயே இலவசமாக இந்த சிறுமிக்கு சர்வதேச தரத்தில் செய்யப்பட்டது.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...