கோவையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு


கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு கோவை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். 



பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் மத்தியில் தங்களுடைய ஆதரவினை அளித்து வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காக தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 



கோவை மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி, பறை இசை மற்றும் பல்வேறு கோஷங்களாலும் ஜல்லிக்கட்டிற்கு தடைகோரும் பீட்டா அமைப்பிற்கும், இதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 



மேலும், போராட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகள் போன்றவற்றை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். 



இதனிடையே, மாணவர்கள் சிலர் ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் ஏற்படும் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை தொட்டி இல்லாததால் அதனை மூட்டைகளில் சேகரித்தும் வருகின்றனர்.



Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...