கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பில்லூர், ஆழியாரில் இருந்து தண்ணீர் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின் மூலம் கூடுதலாக குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு கூடுதலாக ஆழியார் குடிநீர் 20 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 51 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு குறிச்சி பகுதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பில்லூர் குடிநீர், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருடன் கூடுதலாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆழியார் நீராதாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரிலிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் குனியமுத்தூர் பகுதிக்கு வழங்க இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறிச்சி மற்றும் மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறைவுபடாது. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.

எனவே, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...