மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காந்தியின் 69- வது நினைவு தினத்தையொட்டி கோவை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி தலைமையேற்று தொழுநோய் ஒழிப்பு (ஸ்பர்ஷ்) உறுதிமொழியினை வாசிக்க அனைத்து மாநகராட்சி அலுவலர்களும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.