தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குத்த பிப். 6ம் தேதி முதல் சிறப்பு முகாம் துவக்கம்


குழந்தைகளுக்கு 10-வது மாதம் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தட்டம்மை தடுப்பூசிக்கு பதிலாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகள் இணைந்து நடத்தவுள்ளன.

6 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அனைத்து அரசு, அரசு உதவிபெரும் மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படவுள்ளது. 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் பள்ளி செல்லாத பிற குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி முகாமானது கோவை மாவட்டம் முழுவதும் ஊரகப்பகுதிகளிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 431, 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1996 முகாம்கள் பள்ளிகளிலும், 958 முகாம்கள் ஊட்டச்சத்து மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த முகாமினை கோவை மாவட்ட மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...