கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தி சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட நிலையில் படக்குழுக்கு ஈஷா அமைப்பு டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவு.
கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ‘காந்தாரா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னடத்தில் ஹிட்டான "காந்தாரா" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

இத்திரைப்படத்தை ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினருக்கும், ரிஷப் ஷெட்டிக்கும் நன்றி.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வீர மங்கை ஜான்சி ராணியின் வரலாற்றை பேசும் ‘மணிகர்ணிகா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக ஈஷாவில் திரையிடப்பட்டது.
அப்போது, அப்படத்தின் கதாநாயகியான கங்கனா ரனாவத், ஈஷா தன்னார்வலர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னடத்தில் ஹிட்டான "காந்தாரா" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
இத்திரைப்படத்தை ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினருக்கும், ரிஷப் ஷெட்டிக்கும் நன்றி.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வீர மங்கை ஜான்சி ராணியின் வரலாற்றை பேசும் ‘மணிகர்ணிகா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக ஈஷாவில் திரையிடப்பட்டது.
அப்போது, அப்படத்தின் கதாநாயகியான கங்கனா ரனாவத், ஈஷா தன்னார்வலர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.