கோவை உக்கடம் அருகே பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்பு

கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் முருகன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.



சுமார் 3 மணி நேர சோதனையின் போது வீட்டில் இருந்த சுமார் 4 அடியுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருந்தது தெரியவந்தது.



அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டில் கண்டறியப்பட்ட சிலையும் அவரே செய்த சிலை என தெரிவித்ததாகவும், இது குறித்த விடியோவையும் போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது.



இருப்பினும், சிலையின் பழமை தன்மை மற்றும் மற்ற விவரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...