உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.



அந்த வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொடர்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாடகங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது.



இந்நிகழ்ச்சியானது வரும் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களிலும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், எய்ட்ஸ் நோய் குறித்து தெரிந்து கொள்வதற்கும், எச்.ஐ.வி பற்றிய பயம் விலகிடவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குதல்- புறக்கணித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடத்தபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் திரு.அறிவழகன், ஆய்வக நுட்பனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...