சென்னையை தொடர்ந்து கோவையிலும் இனி Road Ease செயலி - மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார்

Road Ease என்ற செல்போன் செயலி மூலம் கோவை மாநகர் பகுதியில் எங்கெங்கு சாலை பணிகள் நடைபெறுகிறது எந்த பகுதியில் மாற்றுப் பாதை எடுக்க வேண்டும் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை அறியலாம்.



கோவை: கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதோடு நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள்,சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் கூகுள் மேப் செயலியில் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தகவல்களை அப்டேட் செய்யும் வகையில் roadEase என்ற செயலியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.



எங்கெங்கு பணிகள் நடைபெறுகிறது, எந்த பகுதியில் மாற்றுப் பாதையில் எடுக்க வேண்டும் என்பது குறித்து இதில் அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் படி காவல்துறையில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னையில் road Ease செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கோவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும்,முகப்பு பக்கம் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் விவரித்தார்.



நிகழ்ச்சியின் போது செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் செய்முறை விளக்கமும் காட்டப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...