கோவை தெலுங்குபாளையம் அருகே பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பெண் கைது..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெண் பணியாளர் ஹேமலதாவிடம் ஓடும் பேருந்தில், 5.5 சவரன் தங்க நகையை பறிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (40). இவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல பணி முடிந்து ஹேமலதா தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து குப்புசாமிநாயுடு மருத்துவமனை நிறுத்தம் அருகே வந்த போது பேருந்தில் வந்த மற்றொரு பெண் திடீரென ஹேமலதா அணிந்திருந்த 5.5 சவரன் செயினை பறித்துக கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஹேமலதா சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து பந்தைய சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவுரி என்பதும், இவர் குழுவாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த பெண் பல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்ததோடு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மற்றொரு பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...