கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்-4 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை கைது செய்த அதிகாரிகள், 6.5 கோடி ரூபாய் மதப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மறைத்து கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் அண்மை காலமாக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த சங்கர், பரமகுடியை சேர்ந்த ராம்பிரபு, மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளில் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...