கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் கொள்ளை - மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணிடம் இருந்த 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடிச்சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் யுக மூர்த்தி. இவரது மனைவி ஜெயகீதா கோவையில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதற்காக அவர் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில் பயணித்துள்ளார். உடன் தனது மகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் செல்வபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உடமைகளை சோதனை செய்துள்ளார்.

அப்போது அவரிடம் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தாங்கள் வந்த பேருந்தில் தங்களது இருக்கையில் மற்றொரு பெண் அமர்ந்திருந்ததாகவும், அவர் அன்னூரில் இறங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அந்த பெண் தங்களது பையை நோட்டமிட்டதாகவும், அவரே நகையை திருடி சென்றிருக்கலாம் எனவும் ஜெயகீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செல்வபுரம் போலீஸார் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...