கோவை செஞ்சேரி மலையில் வரும் டிச.14ல் தென்னை உழவர்கள் மாநாடு - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.150ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதி கோவை செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.



கோவை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வருகிற 14ஆம் தேதி கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் அகத்தியன் வீதியில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் முருகசாமி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல் ஏக்கர் ஒன்றுக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தென்னை உழவர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...