கோவையில் காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்ட கிராம மக்கள் - நேரில் சென்று எஸ். பி விசாரணை - 4 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் காய்கறிகளுடன் ஊடுபயிராக பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர், அங்குள்ள விவசாய நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், பசுமணி கிராமத்தில், கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் பசுமணி கிராமத்துக்கு சென்று சோதனை செய்தனர்.



அப்போது, காய்கறிகளுடன் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சா செடிகளை பயிரிட்டது செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயிரிட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.



பின்னர், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பசுமணி கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



மேலும், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது, விற்பது போன்ற சட்டத்துக்கு விரோதமான செயல்களை செய்வதினால் ஏற்படும் சட்ட விளைவுகளை குறித்தும் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காது காவல்துறைக்கு - கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ். பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...