கோவை வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் குறிஞ்சி வனம் திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்ட வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார். இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



கோவை: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிள்ளையாளர்புரம் பகுதியில் துவக்கப்பட்ட மரம் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

முதல்கட்டத்தில், இந்த வனத்தில் இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளர் பிரமோத், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...