உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு

கொரோனா பரவல் குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு.



திருப்பூர்: சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

இதனிடையே டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, தமிழக அரசும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இதையடுத்து கொரோனா தொற்று பரிசோதனை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி படுக்கை வசதி அமைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் ஆகியோருடன் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு மையங்கள் திறக்கப்பட்டு நுழைவாயில்களில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கிரீனிங், 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது பரவிவரும் ஒமிக்ரான் மாறுபாடு பிஏ 5-ன் துணை வகையான பிஎப் 7 கொரோனா வைரஸ், இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்றும், முந்தைய ஓமிக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது என்ற போதிலும் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பு விகிதம் மிக குறைவு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...