கோவையில் இருந்து புறப்பட்ட சார்ஜா விமானத்தில் பறவைகள் மோதி எஞ்சின் பழுது - விமான சேவை ரத்து

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமான எஞ்சினில் பறவைகள் மோதி எஞ்சின் பழுதானதால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு ஏர் அரேபிய விமானம் 164 பயணிகளுடன் புறப்பட தயாரானது. 

அப்போது விமானம் பறக்க துவங்கிய தருவாயில், விமானத்தில் இடது எஞ்சினில் பறவைகள் திடீரென மோதியதில் இன்ஜின் பிளேடில் பழுது ஏற்பட்டது. உடனடியாக விமான ஓட்டுநர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பத்திரமாக விமானத்தை, கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர், விமானத்தில் இருந்த 164 பயணிகளும் பத்திரமாக வெளியில் அழைத்துவரப்பட்டனர். 

என்ஜினை பொறியாளர்கள் ஆய்வு செய்த போது, இறந்த நிலையில் ஒரு பறவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அப்புறப்படுத்திய பொறியாளர்கள், எஞ்சினை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாற்று என்ஜின் வரும் வரை விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளதால், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருப்பு அறையில் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள் அனைவரும், விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துள்ள நிலையில், மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு பிறகே மீண்டும் ஏர் அரேபியா இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ஜின் கோளாறு ஏற்பட்டவுடனே உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...