பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தை பார்த்து பாராட்டிய பெண்கள்

கோவையில் உள்ள தனியார் திரையங்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தின் இலவச காட்சியை பார்த்த பெண்கள் படக்குழுவை பாராட்டினர்.


கோவை: 2023ஆம் ஆண்டில் திரைக்கு வந்துள்ள முதல் தமிழ் திரைப்படமான “V3”திரைப்படம் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணு பிரபு தயாரிப்பில், அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள V3 திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது ஒரு நாளில் கிடைக்க கூடியது அல்ல. பாலின சமத்துவம், பெண்களுக்கு மதிப்பளிப்பது தொடர் விழிப்புணர்வு போன்றவை தான் தீர்வாக அமையும் என்பதை பல திரைப்படங்கள் முன்வைத்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மேஜரான ஆணும் பெண்ணும் சுய ஒப்புதலோடு பாலியலில் ஈடுபடுவது ஒரு குற்றமாக பார்க்க கூடாது. மாறாக, பாலியல் தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கருத்தை முன்வைக்கிறது இன்று வெளியாகியுள்ள V3 திரைப்படம்.

கோவை புரூக் ஃபீல்டுஸ் மாலில் உள்ள எஸ்.பி.ஐ திரையரங்கில் V3 திரைப்படத்தின் முதல் காட்சியை தயாரிப்பாளர் விஷ்ணு பிரபு மற்றும் இயக்குனர் அமுதா வாணன் மற்றும் திரைக்குழுவினர் வெளியிட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படம் குறித்து இயக்குனர் அமுதவானன் நம்மிடம் பேசியதாவது, இன்று சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது. அவற்றில் எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால் அதில் பல்வேறு விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும். போதை, குடிப்பழக்கம், பெண்களை துட்சமாக கருதும் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, இது போன்ற குற்றங்களில் ஈடுபட எண்ணுவோருக்கு ஒரு பாடமாக எச்சரிக்கை மணியாக அமைந்தாலும், பாலியல் குற்றங்களை குறைக்க நாம் இந்த பிரச்சனையை அதன் அடி ஆழத்தில் இருந்து பார்க்க வேண்டும். அது தான் V3 திரைப்படம் உருவாக முக்கிய நோக்கமாகும்.

பாலியல் தொழிலை அரசு அங்கீகரித்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த கேள்வியை தான் V3 படத்தில் நான் முன் வைத்துள்ளேன்.

பெரும்பாலும், பாலியல் தொழில் நடக்கும் ரெட் லைட் ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிகளை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலியல் குற்றங்கள் குறைவு ஆய்வுகள் கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...