மாமன்ற உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் - பட்டியல் அளிக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயல்படும்‌ மாமன்ற உறுப்பினர்களின் பட்டியல்‌ தயாரித்து அளிக்கும்படி மண்டல உதவி ஆணையர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சியில்‌ சிறப்பாகச் செயலாற்றிவரும்‌ மாமன்ற உறுப்பினர்களைப் பாராட்டி குடியரசு தினவிழாவில்‌, நற்சான்றிதழ்‌ வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு ஒரு மாமன்ற உறுப்பினர்‌ வீதம்‌ 5 மண்டலத்திற்கு 5 மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களின்‌ பெயர்‌ பட்டியலை எதிர்வரும்‌ 19ஆம்‌ தேதிக்குள்‌ ஆணையர்‌ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌.

மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்ததற்கு 10 மதிப்பெண்‌, மாமன்ற கூட்டத்தில்‌ ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியதற்கு 5 மதிப்பெண்‌, நமக்கு நாமே திட்டத்துக்கான பங்களிப்பு 10 மதிப்பெண்‌, திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டம்‌ செயலாக்கத்தில்‌ பங்களிப்புக்கு 10 மதிப்பெண்‌, பொது ஒதுக்கீட்டு இடம்‌ மீட்பு மற்றும்‌ பராமரிப்பு பணியில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, வரிவசூலிப்புப்‌ பணிகளில்‌ பங்களிப்புக்கு 5 மதிப்பெண்‌, பொதுமக்களிடையே நன்மதிப்புக்கு 5 மதிப்பெண்‌ என மொத்தம்‌ 50 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்‌.

மாமன்றத்திற்கு வருகை, ஆக்கப்பூவமான ஆலோசனை ஆகியவற்றுக்கான மதிப்பெண்கள்‌ மாமன்ற செயலாளர்‌ மூலம்‌ அனைத்து வார்டுகள்‌ குழு உதவி ஆணையர்களுக்கும்‌ தனியாக அனுப்பி வைக்கப்படும்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...