உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திருமூர்த்திமலை. இங்கு, சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் சிறுதானிய பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுவுடன் உடுமலை ராயல் அரிமா சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ஆகியவையும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தினர்.



கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக, பாரம்பரிய வள்ளி கும்மி, குதிரை வண்டி, மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.



காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டு, பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணாமணி, மாவட்ட சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர், மைவாடி விவேகானந்தா வித்யாலயம் நிறுவனர் மூர்த்தி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சத்தியம் பாபு, எஸ் எம் டிராவல்ஸ் நாகராஜ், தளிபேரூராட்சி தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...