2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் கொடுமை - கோவையில் இருவர் கைது

கோவையில் 2 ஆண்டுகளாக 10 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்தவர் ராஜ் என்கிற அதிர்ஷ்டராஜ் (27). இவருக்கு திருமணமாகி. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டுக்குள் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

நாளடைவில், அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவத்தன்று அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அந்த சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...