கொடி நாள் நிதி வசூல் - கோவை மாநகராட்சிக்கு விருது

கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181 சதவீதம் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, ஆளுநர் மாளிகையில் விருது வழங்கப்பட்டது.


கோவை: கொடி நாள் வசூலில் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாக வசூலித்த கோவை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கினார்.

முப்படை வீரர்களின் நலனைக் காக்க ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் படை வீரர்கள் நலனுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது.

மேலும் இவ்வாறு கொடிநாள் வசூல் செய்யும் சிறந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தன்று விருதுகளும் வழங்கப்படும். அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயித்த கொடிநாள் நிதியை விட ரூ.43லட்சத்து22 ஆயிரத்து 820 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 181% அதிகம். எனவே சிறப்பான முறையில் நிதி வசூல் செய்ததற்காகக் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இதனைச் சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பெற்றுக்கொண்டார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...