கோத்தகிரி அருகே உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை!

கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம். கூண்டு வைத்து கரடியை விரைவில் பிடிக்கும்படி மக்கள் கோரிக்கை.



நீலகிரி: பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து அரவேணு செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதி உள்ளது. இங்குள்ள குடியிருப்பைச் சுற்றிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கருஞ்சிறுத்தை, 2 சிறுத்தை என 4 சிறுத்தைகள் உலா வந்தன.

அதேபோல் கரடிகளும் தொடர்ந்து உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். மேலும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குத் தொடர் கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து கடந்த சில நாட்களாகக் கரடி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒற்றைக் கரடி உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பைச் சுற்றி வந்த கரடி பின்பு தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது.

அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சுற்றி கரடிகள் தொடர்ந்து உலா வருவதை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து, வேறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் பிடிபட்ட இரண்டு கரடிகள் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...