ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..! - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரச்சித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது. இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா மாசாணி அம்மன் கோயில் முன்பு உள்ள ராஜகோபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த பத்து நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த மூன்றாம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று இரவு குண்டம் வளர்க்கப்பட்டது.



இதையடுத்து, இன்று 47 அடி நீளம் உள்ள தீக்குண்டத்தில் முன்னதாக கோயிலின் அருளாளி பூப்பந்து உருட்டி முதலில் தீ மிதித்து குண்டம் இறங்கினார்.



அதனைத் விரதம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.



பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆனைமலையில் குவிந்திருந்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...