வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே உலா வந்த கரடிகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கோவை வால்பாறை வனச்சரக அலுவலக வளாகத்தில் குட்டியுடன் உலா வந்த கரடிகளை, அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக அலுவலகம் அருகே கரடிகள் உலா வந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், சிறுத்தை, கரடி, மான் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வாட்டர் பால்ஸ் எஸ்டேட் அருகேயுள்ள வால்பாறை வனச்சரக அலுவலகம் முன்பு இன்று காலை குட்டியுடன் இருந்த கரடி ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த உழியர்கள் கரடிகளை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்பு கரடிகள் வனப்பகுதிக்குள் சென்றன. இந்நிலையில், ஊழியர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...