உதகையில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் - வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு!

உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி தொடர்ந்து சீல் வைத்து வரும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து வியாபாரிகள் சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



நீலகிரி: உதகையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நகராட்சி கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடக்கடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான கடைகளுக்கு 90 சதவீத வாடகை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத வாடகையை மார்ச் மாதம் இறுதிக்குள் செலுத்த வியாபாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் குறைந்தபட்ச வாடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று ஒரே இரவில் 30 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சீல் வைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே புதிய வாடகை முறையைத் தவணை முறையில் செலுத்தி வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறிய வியாபாரிகள், நகராட்சி சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...