உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

உடுமலை அருகே போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளபாளையம் கிளை சார்பில் இன்று தொடங்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களிடம் போதைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் பள்ளபாளையம் கிளையில் துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில், உடுமலை முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் போதைக்கு எதிராக முதல் கையெழுத்திட்டுத் துவக்கிவைத்தார்.



சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், வி.தொ.ச கமிட்டி சுந்தரம், இயேசுராஜ் முன்னிலை வகித்தனர். இதில் உடுமலை பொருளாளர் குமரகுரு, கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜீத்குமார் பெருமாள்சாமி, இமான் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் பொதுமக்களிடமும் கடை வீதிகளிலும் துண்டறிக்கை கொடுத்து போதைக்கு எதிராகப் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோரிடம் கையெழுத்துப் பெற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...