கோவை துடியலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திவான், நடராஜ், முத்துகுமார் என 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 34 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.


கோவை: துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துடியலூர், அப்பநாய்க்கன்பாளையம், சுப்ரமணியம்பாளையம், கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



இதனை அடுத்து தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான்(20), நடராஜ்(55) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கருங்கடலைச் சேர்ந்த முத்துகுமார்(31) என்பதும், அவர்கள் பல இடங்களில் வீடு புகுந்து நகைகள் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...